போத்தனூர் அருகே ரெயில் மோதி கால்கள் துண்டாகி முதாட்டி பலி

published 2 years ago

போத்தனூர் அருகே ரெயில் மோதி கால்கள் துண்டாகி முதாட்டி பலி

கோவை: கோவை போத்தனூர் ரெயில் நிலையம் அருகே 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ரெயில் மோதி கால்கள் துண்டாகி ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டு இருந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து கோவை ரெயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே காவல்துறையினர் துணை-ஆய்வாளர் கவிதா தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அந்த மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் அவரிடம் விசாரித்ததில் அவர் பெயர் அலமேலு (70) என்று மட்டும் கூறினார். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அலமேலு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து காவல்துறையினர் மூதாட்டியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரெயில் மோதி கால்கள் துண்டாகி  இறந்த மூதாட்டி எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை. இதுகுறித்து ரெயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe