காரமடையில் நகைக் கடை பூட்டை உடைத்து அரை கிலோ தங்கம், 6 கிலோ வெள்ளி கொள்ளை

published 2 years ago

காரமடையில் நகைக் கடை பூட்டை உடைத்து அரை கிலோ தங்கம், 6 கிலோ வெள்ளி கொள்ளை

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே காரமடை மாரியாபுரம்  பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவர் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள வைர நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி  சாந்தாமணி (43). இவர் காரமடை பகுதியில் நகைக் கடை  வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று வியாபாரம் முடிந்து வழக்கம் போல் கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றார்.

இந்நிலையில்  இன்று காலை கடையில் பூட்டு உடைக்கப்பட்டு கடையின் ஷட்டர் திறந்து இருந்தது. இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் சாந்தாமணிக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உடனே சாந்தாமணி மற்றும் செந்தில் ஆகியோர் கடைக்கு விரைந்து வந்து பார்த்தனர்.

அப்போது கடையின் பூட்டை உடைத்து கடையிலிருந்த அரை கிலோ தங்க நகைகள் அதாவது 62 பவுன் நகை, 6 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டுப் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  பின்னர் இதுகுறித்து காரமடை காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆய்வாளர் குமார் தலைமையில் காவல்துறை மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கைரேகை நிபுணர்கள் கடையில் ஆய்வு செய்து அங்குப் பதிவாகி இருந்த கைரேகைகளைப் பதிவு செய்தனர். மேலும்  மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டது.  

இதையடுத்து காவல்துறையினர் அந்த பகுதியிலுள்ள சி.சி.டி.வி காமிராக்களை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து சாந்தாமணி கொடுத்த புகாரின் பேரில் காரமடை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை  வலைவீசித் தேடி வருகின்றனர்.  

காவல் நிலையம் அருகிலும், கண்காணிப்பு காமிராக்கள் அதிகம் இருக்கும் பகுதியில் அரை கிலோ தங்க நகைகள்- வெள்ளி கொள்ளை சம்பவம் நடந்திருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe