உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலப் பணி- நொய்யல் ஆற்றில் 3 இடங்களில் தூண்கள்: போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

published 2 years ago

உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலப் பணி- நொய்யல் ஆற்றில் 3 இடங்களில் தூண்கள்: போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

கோவை: கோவை உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பாலம் கட்டும் பணி இரண்டு கட்டமாகப் பிரித்து நடத்தப்பட்டு வருகிறது. உக்கடம் முதல் கரும்புக்கடை சந்திப்பு வரையிலான பாலம் பணி 90 சதவீதம் முடிந்து விட்டது.

தற்போது ஆத்துப்பாலம் சந்திப்பு பகுதியில் ஏறும்-இறங்கும் தளங்கள் அமைக்கும் பணி நடக்கிறது. உக்கடம் வாலாங்குளம் ஏறும்-இறங்கும் தளம் 623 மீட்டர் தூரத்திற்கும், ஆத்துப்பாலம் ஏறும்-இறங்கும் தளம் 1051 மீட்டர் தூரத்திற்கும் கட்டப்பட்டு வருகிறது. 4 வழிப்பாதை விரிவாக்க 733 மீட்டர் தூரத்திற்குக் கட்டப்படுகிறது.
ஆத்துப்பாலம் ஏறும்-இறங்கும் தளம் அமைக்கும் பணிக்காக நொய்யல் ஆற்றின் நடுவில் மேம்பாலத் தூண்கள் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

மேம்பாலத்தில் தூண்கள் 12 மீட்டர் உயரத்திற்கு 3 இடங்களில் அமைக்கப்படுகிறது. ஆத்துப்பாலத்தின் மேற்கு பகுதி ஆற்றிலும், கிழக்குப் பகுதியிலும், மையப் பகுதியிலும் தூண்கள் அமைக்கப்படுகிறது. மையப்பகுதியில் இரு பாலத்திற்கு இடையே உள்ள இடைவெளியைப் பயன்படுத்தி தூண் அமைக்க மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது.

மண் சோதனையில் நீர் வரத்து அதிகமாக இருப்பது தெரியவந்தது. மண் தோண்டியபோது நீர் அதிகமாக வந்த நிலையில், நீர் வராமல் தடுப்பு அமைத்துத் தாங்கு தூண் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மையப்பகுதியில் தாங்கு தூண் அமைக்கும் போது பழைய பாலத்தில் போக்குவரத்து பாதிக்கும் நிலை உள்ளது.
இதற்காக மாற்றுப்பாதை அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது.

ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள ஏறும்-இறங்கும் தளங்களின் பணிகள் இதுவரை 40 சதவீதம் வரை முடிந்துள்ளது. ஆற்றின் மையத்தில் 3 தாங்கு தூண்கள் அமைக்கப்பட்டால், கர்டர் மூலமாகப் பொள்ளாச்சி ரோடு மற்றும் பாலக்காடு ரோடு பாலங்களை இணைக்க முடியும்.  விரைவில் பணிகள் முடிக்க, ஆத்துப்பாலம் வழியாகச் செல்லும் கனரக வாகனங்களை புட்டுவிக்கி ரோடு வழியாகத் திருப்பி விட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். அனைத்து வாகனங்களையும் குறுகலான, பணி நடக்கும் பகுதியில் திருப்பி விடுவதால் போக்குவரத்து நெரிசலும் அதிகமாகி வருகிறது. இதனால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe