காரமடையில் கடையை உடைத்து நகை- வெள்ளியைக் கொள்ளையடித்த கேரள முதியவர் கைது

published 2 years ago

காரமடையில் கடையை உடைத்து நகை- வெள்ளியைக் கொள்ளையடித்த கேரள முதியவர் கைது

கோவை: மேட்டுப்பாளையம் அருகே காரமடை மாரியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவர் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள வைர நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி சாந்தாமணி (43). இவர் காரமடை பகுதியில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று வியாபாரம் முடிந்து வழக்கம் போல் கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றார்.

அப்போது அவரின் கடையின் பூட்டு உடைத்து மர்ம நபர்கள் கடையிலிருந்த 13 பவுன் தங்க நகை மற்றும் அரை கிலோ வெள்ளியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இதுகுறித்து சாந்தாமணி காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் 3 தனிப்படை அமைத்துக் கடை மற்றும் அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்து அதில் பதிவாகி இருந்த காட்சியை வைத்து கொள்ளையனைத் தேடி வந்தனர்.

அப்போது கொள்ளையன் கேரளாவில் பதுங்கி இருப்பது காவல்துறைக்குத் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை காவல்துறையினர் கேரளா மாநிலம் கண்ணூர் விரைந்தனர். அங்கு காவல்துறையினர் முகாமிட்டு கொள்ளையனைத் தேடி நெல்லிகுந்து என்ற இடத்துக்குச் சென்றனர். அங்குக் கொள்ளையன் காவல்துறையினர் வருவதைப் பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்தார்.

உடனே காவல்துறையினர் கொள்ளையனை மடக்கிப் பிடித்தனர். பின்னர் கொள்ளையனைக் கோவை காரமடை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொள்ளையன் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் நெல்லிகுந்து பகுதியைச் சேர்ந்த தங்கச்சி மாருதி (52) என்பது தெரியவந்தது.
அவரிடம் இருந்து வெள்ளி பொருட்களை மீட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் காவல்துறையினர் தங்கச்சி மாருதியைக் கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe