அன்னூர் அருகே 17 வயது சிறுமி கர்ப்பம்: வாலிபர் போக்சோவில் கைது

published 2 years ago

அன்னூர் அருகே 17 வயது சிறுமி கர்ப்பம்: வாலிபர் போக்சோவில் கைது

கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள குப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் 21 வயது வாலிபர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாகக் காதலித்து வந்தனர். இந்தநிலையில் சிறுமியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களது எதிர்ப்பை மீறிக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22-ஆம் தேதி சிறுமியை வாலிபர் திருமணம் செய்தார். பின்னர் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அவருடன் குடும்பம் நடத்தி வந்தார்.

தற்போது சிறுமிக்கு 17 வயது ஆகிறது. இந்த நிலையில் சிறுமி கர்ப்பமானார். அவரை வாலிபர் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது மருத்துவர்கள் சிறுமியைப் பரிசோதனை செய்த போது அவர் 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. சிறுமியின் வயதை மருத்துவர்கள் ஆய்வு செய்த போது அவர் 17 வயதில் கர்ப்பமானது தெரிய வந்தது.

இது குறித்து அவர்கள் அன்னூர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் வாலிபர் சிறுமியைத் திருமணம் செய்து கர்ப்பமாக்கியது தெரிய வந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe