கோவையில் தம்பியைக் கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன் கைது

published 2 years ago

கோவையில் தம்பியைக் கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன் கைது

கோவை: கோவை அருகே தகராற்றில் தம்பியைக் கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, கொள்ளுபாளையம் எம். ஜி. ஆர். நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன், 29. இவரது தம்பி தேவராஜ், 25. இருவரும் குடும்பத்துடன், கேரள மாநிலம், பாலக்காடு சந்திரநகரில் வசித்து வந்தனர்.

பைக்கில் மசாலா துாள், சாக்லேட் ஆகியவற்றை விற்பனை செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு, அண்ணன்- தம்பி இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மணிகண்டன் தேவராஜைக் கத்தியால் கழுத்தில் குத்தினார். பின், பைக்கில் தப்பிச் சென்றார்.

படுகாயம் அடைந்த தேவராஜ், பாலக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். பாலக்காடு காவல்துறையினர் தனிப்படை அமைத்து மணிகண்டனைக் கைது செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe