கோவையில் 11 மாத குழந்தையுடன் கர்ப்பிணி மாயம்

published 2 years ago

கோவையில் 11 மாத குழந்தையுடன் கர்ப்பிணி மாயம்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்: https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை: கோவை சூலூர் பீடம்பள்ளியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 35). இவரது மனைவி பிரீத்தி (29). இவர்களுக்குக் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி யுவந்திகா என்ற 11 மாதக் குழந்தையுள்ளது.
தற்போது பிரீத்தி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். சம்பவத்தன்று மோகன்ராஜ் வழக்கம்போல வேலைக்குச் சென்றார். பின்னர் இரவு வீடு திரும்பினார். அப்போது அவர் தனது மனைவி மற்றும் குழந்தை வீட்டில் இல்லாததைப் பார்த்தார்.
அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. பின்னர் உறவினர்களுக்கு போன் செய்து விசாரித்தார். அங்கும் அவர் வரவில்லை எனக் கூறியதாகத் தெரிகிறது.
இதையடுத்து மோகன்ராஜ் சூலூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 11 மாத குழந்தையுடன் மாயமான கர்ப்பிணி பிரீத்தியைத் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe