ஊட்டி குந்தா அரசு தொடக்கப் பள்ளிக்குத் தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான விருது

published 2 years ago

ஊட்டி குந்தா அரசு தொடக்கப் பள்ளிக்குத் தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான விருது

கோவை: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மின்வாரிய மேல் முகாமில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. எல்.கே.ஜி முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் மஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏழை மற்றும் தேயிலை தோட்டத்தொழிலாளர்கள், விவசாயிகளின் குழந்தைகள் படிக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 10-க்கும் குறைவான மாணவர்களே படித்து வந்த நிலையில் தலைமை ஆசிரியை ஜெயந்தி மற்றும் பள்ளி ஆசிரியர்களின் தீவிர முயற்சியால் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து தற்போது இப்பள்ளியில் 140-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக அரசின் சிறந்த தொடக்கப்பள்ளிக்கான விருது இந்த பள்ளிக்கு அறிவிக்கப்பட்டது.

இதனைப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார். இவ்விருதைப் பள்ளித் தலைமை ஆசிரியை ஜெயந்தி மற்றும் ஆசிரியை சபீதா, வட்டாரக் கல்வி அலுவலர் வனிதா ஆகியோர் அமைச்சரிடம் இருந்து பெற்றுக்கொண்டனர். சிறந்த பள்ளிக்கான விருது பெற்றத் தலைமை ஆசிரியை ஜெயந்தி மற்றும் ஆசிரியர்களைப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe