அதிகவட்டி கேட்டு மிரட்டுவதாக புகார்

published 2 years ago

அதிகவட்டி கேட்டு மிரட்டுவதாக புகார்

கோவை: கோவை பீளமேடு காந்திமாநகரை சேர்ந்தவர் கோகுல் (வயது32). உணவு பார்சல் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவர் கடந்த 2020ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சொர்ணவள்ளி என்பவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கினார்.

அப்போது பூர்த்தி செய்யப்படாத காசோலையை சொர்ணவள்ளி பெற்றுக் கொண்டார். பின்னர் கோகுல் ரூ.70 ஆயிரம்  வரை வட்டியுடன் சேர்த்து பணத்தை கட்டினார். ஆனால், சொர்ணவள்ளி ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கூறி கோகுலிடம் இருந்து பெற்ற காசோலையை வங்கியில் செலுத்தியுள்ளார்.

பணம் இல்லாததால் காசோலை திரும்பியது. இதனையடுத்து சொர்ணவள்ளி தன்னிடம் கடன் பெற்று கோகுல் ஏமாற்றிவிட்டதாக போலீசில் புகார் அளித்தார். இதனிடையே அதிகவட்டி கேட்டு தன்னை மிரட்டுவதாக கோகுல் பீளமேடு போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe