ஆணவக் கொலை செய்யப் பெற்றோர் திட்டம்: காதல் திருமணம் செய்த இளம்பெண் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

published 2 years ago

ஆணவக் கொலை செய்யப் பெற்றோர் திட்டம்: காதல் திருமணம் செய்த இளம்பெண் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்: https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE


கோவை: கோவை செட்டிபாளையம் சண்முகா நகரைச் சேர்ந்தவர் ஜாவித் உசைன். இவரது மனைவி சமீனா (31). இவர் இன்று கோவை ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

"எனது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி. நான் 2015ம் ஆண்டு சத்தியமங்கலம் அருகே உள்ள வரதம்பாளையத்தைகச் சேர்ந்த ஜாவித் உசேன் என்பவரைப் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டேன். தற்போது எங்களுக்கு 7 வயதில் காலித் உசேன் என்ற மகன் உள்ளான். எனது தந்தை புஞ்சை புளியம்பட்டியில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். 

எனது கணவர் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் எனது தந்தையும், அவரது சகோதரர்கள் அஸ்கர் அலி, அசரப் அலி, சவுகத் அலி, ஷான் பாஷா, இதயத் அலி, முஹம்மத் இத்ரிஸ் ஆகியோர் என்னையும், எனது கணவரையும் பிரிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

எனது கணவரைத் தாக்குவதும், மிரட்டுவதுமாக இருந்தனர். இந்நிலையில் நாங்கள் பல ஆண்டுகள் அவர்களுக்குத் தெரியாமல் பல்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தோம். தற்போது செட்டிபாளையத்தில் வசித்து வருகிறோம். நாங்கள் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டவர்கள் என்னையும் எனது கணவரையும் ஆணவக் கொலை செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே எனக்கும், எனது கணவர் மற்றும் குழந்தைக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்." இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe