கோவையில் உயர் ரக போதை பொருட்களுடன் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது

published 2 years ago

கோவையில் உயர் ரக போதை பொருட்களுடன் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது

கோவை: கோவை மதுக்கரை பகுதியில் உயர் ரக போதை பொருட்களுடன் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பத்ரிநாராயணன் அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய போதை பொருட்களை விற்பனை செய்வோர்கள் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

அதன் அடிப்படையில் இன்று காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுக்கரை காவல் ஆய்வாளர் வைரம் மற்றும் காவல்துறையினர் மதுக்கரை அருகே தனியார் கல்லூரியின் அருகே உள்ள பேக்கரியின் பின்புறம் சென்று   சோதனை மேற்கொண்ட போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரை விசாரணை செய்தனர்.

அந்நபர் கேரளா மாநிலத்தை சேர்ந்த சுகுமாரன் சாபு என்பவரது மகன் சபுராணி அரேனா நிகில் (23) என்பதும் அவர் போதை ஏற்றக்கூடிய உயர் ரக போதை பொருளான மெத்தபெட்டமைன்-ஐ விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.

எனவே சபுராணி அரேனா நிகில்(23) கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த 54 கிராம் எடையுள்ள மெத்தபெட்டமைன் மற்றும் 1.500 கிலோ கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து, மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe