செட்டிபாளையத்தில் வாலிபர் சடலமாக மீட்பு - நண்பரை தேடுகிறது போலீஸ்

published 2 years ago

செட்டிபாளையத்தில் வாலிபர் சடலமாக மீட்பு - நண்பரை தேடுகிறது போலீஸ்

கோவை, கோவை செட்டிபாளையம் பெரியகுயிலி இடும்பன் கோவில் அருகே  உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காலியிடத்தில் கை கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் பிணமாக மீட்கப்பட்ட நபர் பீகார் மாநிலத்தை சேர்ந்த லாலம் கேவத் (வயது 37) என்பதும், அவர் சூலூர் தென்னம்பாளையம் விஷாகா நகர் பகுதியில் குடும்பத்துடன் தங்கி, கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் அவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் லாலம் கேவத் கடந்த 8-ந் தேதி பணிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை என்பதும், குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் செட்டிபாளையம் பகுதியில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது சம்பவத்தன்று லாலம் கேவத் பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஊட்டியை சேர்ந்த சார்லஸ் (வயது 35) என்பவருடன் மதுக்குடிக்க சென்றதும், திரும்பி வந்தபோது சார்லஸ் மட்டும் வந்துள்ளார். இதுகுறித்து குடும்பத்தினர் அவரிடம் கேட்டுள்ளனர். அதில், லாலம் கேவத் குடிபோதையில் படுத்துவிட்டார் அதனால்  நான் மட்டும் வந்துவிட்டேன் என்றுள்ளார். அதன்பின்னர் அவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து தலைமறைவாகிவிட்டார்.

இதனால் சந்தேகத்தின் பேரில் போலீசார் தலைமறைவான சார்லசை தேடி வருகின்றனர். அவர் கிடைத்த பின்னரே கொலைக்கான காரணம் தெரியவரும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe