போக்குவரத்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறப்புத் துணை-ஆய்வாளர் மயங்கி விழுந்து மாரடைப்பால் மரணம்

published 2 years ago

போக்குவரத்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறப்புத் துணை-ஆய்வாளர் மயங்கி விழுந்து மாரடைப்பால் மரணம்

கோவை: கோவை காவல்துறை பயிற்சிப் பள்ளி மைதானத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தவர் சுப்பிரமணியம் (வயது 55). இவர் கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்புத் துணை-ஆய்வாளராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு 11.45 மணியளவில் புலியகுளம் விநாயகர் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவரை மீட்டுக் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், சுப்பிரமணியம் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். பணியின் போது இறந்த சிறப்பு துணை-ஆய்வாளரின் சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கடந்தூர்.

இவர் 1998-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இவருக்கு அல்லிராணி என்ற மனைவியும் 1 மகனும், 1 மகளும் உள்ளனர். இந்நிலையில் மாரடைப்பில் உயிரிழந்த துணை-ஆய்வாளர் சுப்ரமணியம் உடலுக்கு மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் அஞ்சலி செலுத்தினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe