சூலூர் பகுதியில் 156 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்: கோவை மாவட்டக் காவல்துறையினர் அதிரடி

published 2 years ago

சூலூர் பகுதியில் 156 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்: கோவை மாவட்டக் காவல்துறையினர் அதிரடி

கோவை: சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப்பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்  முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

அதன் அடிப்படையில் நேற்று (03. 02. 2023)  சூலூர் (கோயம்புத்தூர்- அவினாசி ரோடு) நீலாம்பூர் பகுதியில் போதை ஏற்றக்கூடிய கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்குப் பதுக்கி வைத்திருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கக் காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான சூலூர்- நீலாம்பூர் பகுதிக்கு விரைந்து சென்றனர்.

அங்கு சோதனை மேற்கொண்ட போது விற்பனைக்காகக் கஞ்சா சாக்லேட்டுகளை வைத்திருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் மாதோர் அலிகாஞ் என்பவரது மகன் திலீப் குமார் (38) என்பவரைக் கைது செய்து அவரிடமிருந்து ரூ. 10,81,600 மதிப்புள்ள 156 கிலோ எடைகொண்ட 626 பொட்டலங்களிலிருந்த 27,040 கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இதனைப் பாராட்டும் விதமாகக் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று தனிப்படைக் காவல் துறையினரைப் பாராட்டி வெகுமதியாக பணம் வழங்கினார்.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராகச் செயல்பட்டாலோ  காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப் பொதுமக்கள் தயங்காமல் அழைக்க அவர் அழைப்பு விடுத்தார். கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று கூறினார். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe