கோவையில் கள்ளத்தனமாக மது விற்றவர்கள் 46 பேர் ஒரே நாளில் கைது

published 2 years ago

கோவையில் கள்ளத்தனமாக மது விற்றவர்கள் 46 பேர் ஒரே நாளில் கைது

கோவையின் அனைத்து செய்திகளை அறிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணைந்து கொள்ளலாம் : https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE


கோவை: கோவையில் விடுமுறை நாளிள் மதுபானத்தை கள்ளத்தனமாக விற்பனை செய்த 46 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைக்கு நேற்று விடுமுறை விடப்பட்டிருந்தது. சிலர் மதுபாட்டில்களை பெட்டி, பெட்டியாக பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து போலீசார் கோவை மாநகர பகுதிகளான பீளமேடு, ரத்தினபுரி, ராமநாதபுரம், சிங்காநல்லூர், போத்தனூர், சாயிபாபா காலனி உள்ளிட்ட பல பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்ததாக 46 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 863 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.8 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe