குனியமுத்தூர் அருகே 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

published 2 years ago

குனியமுத்தூர் அருகே 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

கோவை: கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 45). டிரைவர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

சண்முகவேலின் வீட்டு அருகே 3 வயது சிறுமி உள்ளது. இந்த சிறுமி அடிக்கடி இவரது வீட்டிற்கு வருவது வழக்கம். அந்த சிறுமிக்கு சண்முகவேல் சாக்லேட், மிட்டாய் ஆகியவற்றை வாங்கி கொடுத்து வந்தார்.

சம்பவத்தன்று வழக்கம்போல அந்த சிறுமி சண்முகவேலின் வீட்டிற்கு விளையாட சென்றது. அப்போது குடிபோதையில் இருந்த அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதனால் வலி தாங்க முடியாமல் சிறுமி அழுது கொண்டே தனது வீட்டிற்கு சென்றது. சிறுமியிடம் அவரது பெற்றோர் என்ன நடந்தது என்று கேட்டனர். அப்போது சிறுமி, சண்முகவேல் தன்னை பாலியல் தொல்லை செய்ததாக தெரிவித்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து சண்முகவேலிடம் கேட்டனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. பின்னர்  சிறுமியின் பெற்றோர் குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகவேலை கைது செய்தனர். பின்னர் அவரை ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.

அனைத்து மகளிர் போலீசார் சண்முகவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe