பேருந்தில் டிக்கெட் கொடுக்க மறுத்த பெண் மீது தாக்குதல்

published 1 year ago

பேருந்தில் டிக்கெட் கொடுக்க மறுத்த பெண் மீது தாக்குதல்

கோவை: குடிபோதையில் இருந்ததால் பேருந்துக்கு டிக்கெட் கொடுக்க மறுத்த தனியார் டிராவல்ஸ் ஊழியரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை பீளமேடு புதுவரை சேர்ந்தவர் கீர்த்தனா வயது 25. இவர் காந்திபுரம் முதலாவது வீதியில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் டிக்கெட் புக் செய்யும் வேலை செய்து வருகிறார்

சம்பவத்தன்று இவர் பணியில் இருந்த போது சென்னைக்கு செல்வதற்கு டிக்கெட் கேட்டு வாலிபர் ஒருவர் வந்தார் அவர் குடிபோதையில் இருந்ததால் கீர்த்தனா டிக்கெட் கொடுக்க மறுத்து விட்டார் இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தகாத வார்த்தைகளால் பேசி கீர்த்தனாவின் கன்னத்தில் தாக்கினார். பின்னர் கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து சென்றார்.

இதுகுறித்து கீர்த்தனா காட்டூர் போலீசில் புகார் செய்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குடிபோதையில் இருந்ததால் பஸ்ஸில் செல்ல டிக்கெட் கொடுக்க மறுத்த இளம் பெண்ணை தாக்கிய டிரைவர் சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் 44 என்பவரை கைது செய்தனர் பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe