கோவையில் இளநீர் வியாபாரியை மிரட்டி பணம் பறித்தவர் கைது

published 1 year ago

கோவையில் இளநீர் வியாபாரியை மிரட்டி பணம் பறித்தவர் கைது

கோவை: கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் பழனிசாமி(56). இவர் சத்தி ரோட்டில் உள்ள ஒரு மில் எதிரே இளநீர் வியாபாரம் செய்து வருகிறார்.

நேற்று இவர் வியாபாரத்தை முடித்து கொண்டு வீட்டுக்கு புறப்பட தயாராகி கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் பழனிசாமியை மிரட்டி பணம் கேட்டார்.

அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தகாத வார்த்தைகளால் பேசி அவரது சட்டைப்பாக்கெட்டில் இருந்த 500 ரூபாயை பறித்து கொண்டு தப்பி சென்றார்.

இது குறித்து பழனிசாமி சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், வியாபாரியை மிரட்டி பணம் பறித்தது கோவை வெள்ளானைப்பட்டியைச் சேர்ந்த தொழிலாளி கோவிந்தராஜ்(20) என்பது தெரியவந்தது.

காவல் துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe