கோவையில் கோஷ்டி மோதலில் வாலிபர் குத்திக் கொலை

published 1 year ago

கோவையில் கோஷ்டி மோதலில் வாலிபர் குத்திக் கொலை

கோவை: கோவை சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் நேற்று மாலை அதே பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு வாலிபர் மற்றொரு வாலிபரின் தாயாரை தகாத வார்த்தைகளால் பேசி திட்டி உள்ளார்.

இதனால் அவர்களுக்கிடையே அடிதடி ஏற்பட்டது. மேலும் இது கோஷ்டி மோதலை உண்டாக்கியது.

இருதரப்பிலும் சிலர் ஒருவருக்கொருவர் மாறி, மாறி தாக்கி கொண்டனர். இதில் ஆறு பேர் கொண்ட கும்பல் எதிர் தரப்பை சேர்ந்த 3 பேரை கத்தியால் குத்தினர்.  

பின்னர் அவர்களை மிரட்டி அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவத்தில் சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன் (23) என்பவரின் மார்பில் கத்திக்குத்து விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

மேலும் கத்திக்குத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சந்தோஷ்குமார் (22) கோவை அரசு மருத்துவமனையிலும், மற்றும் சஞ்சய் என்பவர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக  பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய 4 பேர் கும்பலை தேடி வருகின்றனர். கோவையில் நேற்று நடந்த கோஷ்டி மோதலில் 3 பேரை கத்தியால் குத்தியதில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe