வட இந்தியர்கள் என நினைத்து இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த வாலிபர்கள் மீது தாக்குதல்

published 2 years ago

வட இந்தியர்கள் என நினைத்து இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த வாலிபர்கள் மீது தாக்குதல்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்: https://chat.whatsapp.com/GKcHrWOaZYqGX1TFQywYIz

கோவை: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சந்திரப்பட்டி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் தினேஷ் (வயது 35), பெயிண்டர். இவர் தனது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த வசந்த் என்பவருடன் கடந்த சில  வாரங்களுக்கு முன்பு கோவைக்கு வந்தார்.

 பின்னர் இருவரும் சாய்பாபா காலனி என். எஸ். ஆர். ரோட்டில் உள்ள கட்டிடத்துக்கு பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். சம்பவத்தன்று இவர்கள் வேலை செய்து கொண்டு இருந்த போது அடையாளம் தெரியாத 4 பேர் வந்தனர். அவர்கள் தினேஷ் மற்றும் வசந்திடம் நீங்கள் வட இந்தியர்களா எனக் கூறித் தகராறு செய்தனர். 

அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து தினேஷ், வசந்த் ஆகியோரை அங்கிருந்த இரும்பு கம்பியால் தாக்கி விட்டுத் தப்பிச் சென்றனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

இது குறித்து சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து வட இந்தியர்கள் என நினைத்து இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த வாலிபர்களைத் தாக்கிய 4 பேரைத் தேடி வருகிறார்கள்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe