கோவை சுந்தராபுரம் பகுதியில் விபத்தில் பெண் பலி

published 1 year ago

கோவை சுந்தராபுரம் பகுதியில் விபத்தில் பெண் பலி

கோவை: கோவை சுந்தராபுரம் பிள்ளையார்புரத்தை சேர்ந்தவர் தங்கவேலு மனைவி அமுதா(56). இவர் நேற்று பாலக்காடு மெயின்ரோடு பிகே புதூர் பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த பைக் எதிர்பாராமல் மோதியதில் அமுதா தூக்கி வீசப்பட்டார்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பாக மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe