பொள்ளாச்சி அருகே வீட்டில் நகை பணம் கொள்ளை

published 1 year ago

பொள்ளாச்சி அருகே வீட்டில் நகை பணம் கொள்ளை

கோவை: பொள்ளாச்சி அருகே நல்லகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் நாகரத்தினம் (35). இவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். 

இந்நிலையில் நாகரத்தினம் காலையில் வேலைக்கு சென்றார். இதனையடுத்து இவரது மனைவி வீட்டைப் பூட்டி விட்டு சாவியை குளியலறையில் வைத்துவிட்டு நுங்கு விற்பனைக்கு சென்றுள்ளார்.

பின்னர் இருவரும் பேரூர் கோவிலுக்கு செல்வதற்காக வீட்டில் இருந்த நகைகளை சரிபார்த்தனர். அப்போது அதில் இருந்த 8 பவுன் தங்க நகைகள் திருட்டு போய் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

பின்னர் இதுகுறித்து அவர்கள் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

அப்போது வீட்டில் வைக்கப்பட்டிருந்த நகைகளை திருடியது கஞ்சபட்டி செட்டியார் காலனியைச் சேர்ந்த இந்திரராஜ் (33) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe