ஆன்லைனில் பணத்தை இழந்த நபரின் பணம் மீட்பு: கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்

published 1 year ago

ஆன்லைனில் பணத்தை இழந்த நபரின் பணம் மீட்பு: கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்

கோவை: கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த (05.04.2023) தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிக்கதாசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஞானமணி என்பவர் புகார் கொடுத்தார்.

அந்த புகாரில் இரண்டு வருடங்கள் முன்பு கொரோனா நோய் தொற்று காலத்தில் பணம் ஈட்டுவதற்கு பங்கு வர்த்தகத்தில் தவறான நிறுவன வழிகாட்டுதலின் பேரில் சுமார் ரூ.15,73,395/- வரை முதலீடு செய்துள்ளார் என்றும் அவரது முதலீட்டிற்கு ரூ.61,05,000/- வரை லாபம் கிடைத்துள்ளதாகவும் அவரது போலியான பங்கு வர்த்தக கணக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் மனுதாரரால் மேற்படி தொகையை அந்த பங்கு வர்த்தக கணக்கிலிருந்து தனது வங்கி கணக்கிற்கு மாற்ற இயலவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

இதன் பின்னர் மனுதாரர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, இழந்த பணத்தை மீட்க வேண்டி கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்களின் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல்துறையினர் முறையான நடவடிக்கை எடுத்து தொடர்புடைய எதிர் நபர்களின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு, அதிலிருந்து ஞானமணி இழந்த மொத்தத் தொகையும் மீட்கப்பட்டு அவர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்கள் ஆன்லைனில் குறைந்த பணத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என செய்திகளில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், இணையதளத்தில் உங்களது பணத்தை இழந்து விட்டால் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என்றும் சைபர் கிரைம் புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்தால் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் உங்களை தொடர்பு கொண்டு நீங்கள் இழந்த பணத்தை மீட்டுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்திள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe