கோவையில் கணவனை விட்டு விலகி காதலனுடன் ஓடிய இளம் பெண்

published 1 year ago

கோவையில் கணவனை விட்டு விலகி காதலனுடன் ஓடிய இளம் பெண்

கோவை: கோவை மாவட்டம் வடக்கிபாளையம் அருகே உள்ள செல்லாண்டி கவுண்டன்புதூரைச் சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தைகள் இல்லை. 

இந்நிலையில் இளம் பெண்ணுக்கு மிஸ்டு கால் மூலமாக வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். இதனை இளம் பெண்ணின் கணவர் கண்டித்தார்.

அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று இளம் பெண்ணின் கணவர் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார். 

வேலை முடிந்ததும் மதியம் வீட்டுக்கு திரும்பிய இளம்பெண்ணின் கணவர் தனது மனைவி வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இது குறித்து காதலனுடன் ஓடிய தனது மனைவியை மீட்டுத் தருமாறு வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe