கோவையில் இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை

published 1 year ago

கோவையில் இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை

கோவை: கோவை பேரூர் அருகே ஆறுமுககவுண்டனூரை சேர்ந்தவர் 37 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவரது மகள் மனவளர்ச்சி குன்றியவராக இருந்ததாக தெரிகிறது.

இதனால் இளம்பெண் தனது குழந்தையின் எதிர்காலத்தை நினைத்து கவலையடைந்து உறவினர்களிடம் புலம்பி வந்தார். சம்பவத்தன்று இளம்பெண் வாழ்க்கையில் விரக்தியடைந்து வீட்டில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் அவரது உடலை பார்த்து கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பேரூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe