கோவையில் முதியவர் தற்கொலை: ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் வழக்குப்பதிவு

published 1 year ago

கோவையில் முதியவர் தற்கொலை: ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் வழக்குப்பதிவு

கோவை: கோவை பாப்பநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜசண்முகம் (வயது 60). இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதனால் கடந்த சில நாட்களாக ராஜசண்முகம் கடுமையான மன உளைச்சலில் இருந்தார். 

இதன் காரணமாக வாழ்க்கையில் விரக்தியடைந்த ராஜசண்முகம் நேற்று கழிவறை சுத்தம் செய்ய வைத்திருந்த ஆசிட்டை குடித்து மயங்கினார். குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe