கோவையில் புதிய டாஸ்மாக் : கொந்தளித்துப் புறப்பட்ட சேரன் மாநகர் மக்கள் ..!

published 2 years ago

கோவையில் புதிய டாஸ்மாக் : கொந்தளித்துப் புறப்பட்ட சேரன் மாநகர் மக்கள் ..!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்:  https://chat.whatsapp.com/LJbd9JNXLHQL1siiXxBROA

கோவை: சேரன்மாநகர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் இன்று மனு அளித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சேரன்மாநகர் பகுதியில், வசிக்கும் பொதுமக்கள் வந்து மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "சேரன் மாநகர் பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு  தெரிவித்து, விக்னேஷ் நகர், ஆசிரியர் காலனி, ஜீவா நகர், எஸ்.ஆர் அவென்யூ, சிவசக்தி நகர், ஸ்ரீ சக்தி விநாயகா நகர் உள்ளிட்ட சேரன் மாநகர் சுற்றுவட்டாரப்பகுதிகளின் பெரும்பாலான குடியிருப்பு வாசிகள் ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்துள்ளோம். மேலும் இந்த பகுதிகளில் டாஸ்மாக் கடை வந்தால் இந்த பகுதியிலிருந்து பள்ளிக்கும் , கல்லூரிக்கும் செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள் எனப் பலரும் அச்சமடையும் நிலை உள்ளது. இந்த விஷயத்தில் தலையிட்டு டாஸ்மாக் கடை அமைக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். " என்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe