பொள்ளாச்சியைச் சேர்ந்த லாரி டிரைவரை தாக்கிய 4 பேர் கைது

published 1 year ago

பொள்ளாச்சியைச் சேர்ந்த லாரி டிரைவரை தாக்கிய 4 பேர் கைது

கோவை: கோவை பொள்ளாச்சி அருகே ரங்கசமுத்திரத்தைch சேர்ந்தவர் திருஞானசண்முகம் (வயது 48). இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். 

சம்பவத்தன்று அவர் லாரியை கேரளாவிற்கு ஓட்டிச் சென்றார். அப்போது திவான்சாபுதூர்அம்மன் கோவில் அருகே சென்ற போது, சாமி கும்பிடுவதற்காக லாரியை ரோட்டில் இடது பக்கத்தில் நிறுத்தினார். 

அப்போது லாரியின் பின்னால் 4 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் குடிபோதையில் வந்தனர். இதையடுத்து அவர்கள் திருஞானசண்முகத்திடம் ஏன் லாரியை இங்கு நிறுத்தி இருக்கிறாய் எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக லாரி டிரைவர் மற்றும் வாலிபர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த வாலிபர்கள் திருஞானசண்முகத்தை தகாத வார்த்தைகளால் திட்டி, அவரைத் தாக்கினர். மேலும் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றனர். 

இதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் லாரி டிரைவரை மீட்டு பொள்ளாச்சி கண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து அவர் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர்கள் கேரளாவை சேர்ந்த பிராஜிஸ் (வயது 21), சிஜி (வயது 25), ராஜேஷ் (வயது 30), திணேஷ் (வயது 25) ஆகியோர் என தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe