தண்டவாளத்தில் தலை வைத்து முதியவர் சாவு

published 1 year ago

தண்டவாளத்தில் தலை வைத்து முதியவர் சாவு

கோவை: கோவை ரயில் நிலையத்தில் கடந்த 18-ஆம் தேதி 5-வது பிளாட்பாரத்தில் இருந்து கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட தயாராக இருந்தது. 

அப்போது அங்கு சென்ற ஒருவர் ரெயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து ரயில் முன்பு படுத்துக்கொண்டார். பின்னர் ரயில் புறப்பட்டபோது ரயிலில் சிக்கி அவர் ரத்த வெள்ளத்தில் பலியானார். தகவல் அறிந்து வந்த ரயில்வே காவல் துறையினர் அவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

சுமார் 58 வயது மதிக்கத்தக்க அந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe