ரம்ஜான் தொழுகையின் போது மத மோதலை தூண்டும் வகையில் பதிவிட்ட இருவர் மீது வழக்கு

published 1 year ago

ரம்ஜான் தொழுகையின் போது மத மோதலை தூண்டும் வகையில் பதிவிட்ட இருவர் மீது வழக்கு

 

கோவை: 
கோவையில் ரம்ஜான் தொழுகையின் போது மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாகவும், அதனை முகநூலில் பதிவேற்றம் செய்ததாகவும் 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


ரம்ஜான் பண்டிகை கடந்த 22ம் தேதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கோவையில் பல பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதேபோல் கடைவீதி பகுதியில் உள்ள காயிதே மில்லத் நகரில் உள்ள ஒரு பள்ளிவாசலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. 

அப்போது உரையாற்றிய குதூபா என்பவர் மற்ற மதத்தினர் இடையே மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக தெரிகிறது. இந்த உரையை கோவை காதர் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார். 

 

இது தொடர்பாக கடைவீதி சப் - இன்ஸ்பெக்டர் கோமதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் குதூபா மற்றும் கோவை காதர் ஆகிய இருவரும் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe