நீயா..? திருட்டில் ஈடுபட்ட பெண்ணை பார்த்து 'ஷாக்' ஆன போலீஸ்

published 1 year ago

நீயா..? திருட்டில் ஈடுபட்ட பெண்ணை பார்த்து 'ஷாக்' ஆன போலீஸ்

கோவை: கோவை கோட்டூர் காவல் நிலைய பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கோவில் திருவிழாக்களின் போது பழனியத்தாள் (75), சிவபாக்கியம்(65) மற்றும் துளசியம்மாள்(75) ஆகிய மூன்று பெண்களிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர் 13 சவரன் தங்க செயின்களை திருடி சென்றார்.

இது சம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை துவங்கியது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை செய்து குற்றவாளியை தேடிவந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கெளதமி (36) என்பவர் இக்குற்றங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் இப்பெண் இதுபோன்ற பல திருட்டு குற்றங்களில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்தது. இந்நிலையில் தனிப்படையினர் கௌதமியை கைது செய்து அவரிடமிருந்து திருடிய 13 சவரன் நகையை பறிமுதல் செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

பார்ப்பதற்கு டிப்டாப்பாக இருந்த கௌதமியை பார்த்த போலீஸார் ஷாக் ஆகி "நீயா இந்த வேலைய செஞ்ச" என்று கேட்டுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe