இளம் பெண்ணின் வங்கி கணக்கில் பணம் அபேஸ் செய்த வாலிபர்

published 1 year ago

இளம் பெண்ணின் வங்கி கணக்கில் பணம் அபேஸ் செய்த வாலிபர்

கோவை: கோவை குனியமுத்தூர் அருகே உள்ள ராஜ நாயக்கர் தோட்டத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி விஜயலட்சுமி( வயது 30). 

நேற்று இவர் பணம் எடுப்பதற்காக அந்த பகுதியில் உள்ள 2 ஏடிஎம் மையங்களுக்கு சென்றார். ஏடிஎம் கார்டு பயன்படுத்தி விஜயலட்சுமி பணத்தை எடுக்க முடியவில்லை. இதனையடுத்து அவர் அங்கு வந்த வாலிபர் ஒருவரின் உதவியை நாடினார்.

அவர் உதவி செய்வது போல நடித்து விஜயலட்சுமியின் ஏடிஎம் கார்டு மற்றும் பின் நம்பரை பயன்படுத்தி அவருக்கு தெரியாமல் ரூ.40 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்றார். இது குறித்து விஜயலட்சுமி குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து இளம் பெண்ணுக்கு உதவி செய்வது போல நடித்து அவரது வங்கி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி 40 ஆயிரம் பணத்தை அபேஸ் செய்த வாலிபரை தேடி வருகிறார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe