கோவை மேற்கு மண்டலத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் துவக்கம்

published 1 year ago

கோவை மேற்கு மண்டலத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் துவக்கம்

கோவை: கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம்  36வது வார்டுக்கு உட்பட்ட வடவள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

கோவை மா நகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட வடவள்ளி, வீரகேரளம், கவுண்டம்பாளையம் மற்றும் துடியலூர் பகுதிகளுக்கான பாதாள சாக்கடை திட்டம் ரூ.860 கோடியில் துவங்கப்பட்டுள்ளது. 

இந்த துவக்க விழாவில் மேற்கு  மண்டல தலைவர் தெய்வானை தமிழ்மறை,  மாமன்ற உறுப்பினர்கள் குமுதம் குப்புசாமி,  பத்மாவதி, மேற்கு மண்டல உதவி ஆணையர்,  மாநகராட்சி அதிகாரிகள், திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணை செயலாளர் தமிழ்மறை,  

வடவள்ளி பகுதி  செயலாளர் சண்முகசுந்தரம், பொதுக்குழு உறுப்பினர்கள் குப்புசாமி, கார்த்திகேயன்,  வட்ட செயலாளர்கள் விசுவநாதன், தெய்வம் மகாலட்சுமி, வேலுசாமி, கதிரேசன்,  கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் மருதமலை மகேஷ், பெரியார் நகர் மணி, வக்கீல் சுந்தரராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe