கோவையில் போக்குவரத்து மாற்றம்.. காவல்துறை அறிவிப்பு..

published 1 year ago

கோவையில் போக்குவரத்து மாற்றம்.. காவல்துறை அறிவிப்பு..

கோவை: கோவை சிந்தாமணி - பெரியசாமி ரோடு கிழக்கு, பாஷியகாரலு ரோடு கிழக்கு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக கோவை மாநகர போலீசார் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

பொது மக்கள் அனைவருக்கும் அன்பான அறிவிப்பு

கோவை, சிந்தாமணி சந்திப்பில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, 10ம் தேதி காலை 11.00 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.

(1) மேட்டுப்பாளையம் ரோடு சிந்தாமணி சந்திப்பு வழியாக D.B.ரோடு, வடவள்ளி, மருதமலை, தொண்டாமுத்தூர், தடாகம் செல்லும் வாகனங்கள், கிழக்கு பெரியசாமி ரோடு வழியாக, செல்ல தடை செய்யப்படுகிறது.

மாற்றாக, கிழக்கு பாஷியகாரலு ரோடு வழியாக சென்று, தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.

(2) கிழக்கு பெரியசாமி ரோடு வழியாக, சிந்தாமணி சந்திப்பு மேட்டுப்பாளையம் ரோட்டிற்கு செல்லும் வாகனங்கள், வழக்கம் போல் தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.

இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு, பொது மக்கள் தங்களது ஒத்துழைப்பை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe