கோவையில் ஆன்லைன் முதலீட்டில் 10.33 லட்ச ரூபாய் போச்சு

published 1 year ago

கோவையில் ஆன்லைன் முதலீட்டில் 10.33 லட்ச ரூபாய் போச்சு

கோவை: ஒண்டிப்புதூர் கம்பம் நகர் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்( 23). இவர் தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். 

இவருக்கு சில நாட்களுக்கு முன்பு செல்போன் வாட்ஸ்  அப்பில் ஒரு லிங்க் வந்தது ‌ அதில் ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக  லாபம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது .

இதைத் தொடர்ந்து அவர் அந்த ஆன்லைன் இணைப்பில் சென்று விவரங்களை பெற்றார்.   ஆன்லைன் டிரேடிங் டாஸ்க் மூலமாக 150 ரூபாய் லாபம் கிடைத்தது.  தொடர்ந்து இவர்  லிங்க் பகுதியில் அனுப்பி வைக்கப்பட்ட வங்கி கணக்கில் பணம் அனுப்பி முதலீடு செய்தார். 

தொடர்ந்து அதிக லாபம் வரும் என கருதிய கோபாலகிருஷ்ணன் 10.30 லட்ச ரூபாய் தனது வங்கி கணக்கில் அனுப்பி வைத்தார் . ஆனால் ஆன்லைன் முதலீட்டில் எந்த லாபமும் கிடைக்கவில்லை.‌ 

முதலீடு செய்த பணமும் திரும்ப வரவில்லை. இது தொடர்பாக கோபாலகிருஷ்ணன் கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார் . போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe