வாலிபரை கத்தியால் குத்திய கஞ்சா  வியாபாரிகள் இரண்டு பேர் கைது

published 1 year ago

வாலிபரை கத்தியால் குத்திய கஞ்சா  வியாபாரிகள் இரண்டு பேர் கைது

கோவை:  உக்கடம் குடிசை மாற்று வாரிய வீடு பகுதியை சேர்ந்தவர் அப்சல் (19). இவர் வேலைக்கு எதுவும் செய்யாமல் வேலைக்கு எதுவும் செல்லாமல் கஞ்சா வியாபாரம் செய்து வருவதாக தெரிகிறது 

இவர் நேற்று சுங்கம் பைபாஸ் ரோட்டில் கஞ்சா வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது உக்கடம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்( 27) மற்றும் பாலமுருகன்( 24) ஆகியோர் அவரிடம் வந்து வாக்குவாதம் செய்தனர் . இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் கார்த்திகேயன் பாலமுருகன் ஆகியோர் அப்சலை தாக்கி கத்தியால் குத்தினர் . இதில் காயமடைந்த அப்சல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இது தொடர்பாக பெரிய கடைவீதி போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயன் பாலமுருகன் ஆகியோரை கைது செய்தனர்.  கைதான இரண்டு பேரும் கஞ்சா வியாபாரம் திருட்டு என பல்வேறு வழக்கில் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe