மது போதையில் கிணற்றில் குதித்த முதியவர் உயிரிழப்பு

published 1 year ago

மது போதையில் கிணற்றில் குதித்த முதியவர் உயிரிழப்பு

கோவை ஆலாந்துறை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இக்கரை போளுவாம்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து முப்பது வருடங்களாக பராமரித்து வருபவர் அதே பகுதியைச் சேர்ந்த சின்னதுரை(70) இவருக்கு அதிக குடிப்பழக்கம் இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்றிரவு மது போதையில் இருந்த சின்னதுரை போதை பழக்கத்தை விட முடியவில்லையே என கவலையில் அவரது பக்கத்து தோட்டத்தில் இருந்த 45 அடி ஆழமுள்ள கிணற்றில் திடீரென குதித்துள்ளார்.

இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக தொண்டாமுத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினருக்கும் ஆலாந்துறை காவல்துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற மீட்பு பணி துறையினர் சின்னதுரையை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர் அப்போது கனமழை பெய்ததன் காரணமாக மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது. இதனிடையே சின்னதுரை உயிரிழந்துள்ளார்.

பின்னர் அவரது உடலை கயிறு மூலமாக மீட்ட தீயணைப்புத் துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இதுகுறித்து ஆலாந்துறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe