வாலிபருக்கு கத்திகுத்து; தொழிலாளி கைது

published 1 year ago

வாலிபருக்கு கத்திகுத்து; தொழிலாளி கைது

கோவை: கோவை ராமநாதபுரம் ஒலம்பசை சேர்ந்தவர் ராஜா(32). கூலி தொழிலாளி. இவர் நேற்று காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் நின்றிருந்தார்.

அப்போது அவருக்கு தெரிந்த கவுண்டம்பாளையம் பிரபு நகரை சேர்ந்த தொழிலாளி தாஸ்(42) என்பவர் அங்கு வந்தார். அவர் ராஜாவிடம் பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த தாஸ் தகாத வார்த்தைகளால் பேசி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜாவை குத்தினார். பின்னர் அவரை மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றார். கத்திகுத்தில் கன்னத்தில் காயமடைந்த ராஜாவை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக காட்டூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாசை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe