சின்னவேடம்பட்டி அருகே குளியல் அறையில் மயங்கி விழுந்த வாலிபர் பலி

published 1 year ago

சின்னவேடம்பட்டி அருகே குளியல் அறையில் மயங்கி விழுந்த வாலிபர் பலி

கோவை: கோவை சின்னவேடம்பட்டி அருகே உடையார்பாளையத்தைச் சேர்ந்தவர் குழந்தைவேல் (52). இவரது மகன் தார்சன் (வயது 31). இவர் எம்பிஏ முடித்து விட்டு ஆவாரம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பயிற்சி பெற்று வந்தார்.

 இந்நிலையில் வேலையை முடித்து விட்டு அவரது வீட்டிற்கு சென்றார். பின்னர் அவரது வீட்டில் உள்ள குளியல் அறைக்கு குளிப்பதற்காகச் சென்றார்.

 அப்போது குளியல் அறையில் இருந்து திடீரென சத்தம் கேட்டது. அந்த சத்தத்தைக் கேட்டு குழந்தைவேல் குளியல் அறைக்குச் சென்று பார்த்தபோது, அவரது மகன் சுயநினைவின்றி கீழே விழுந்து மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

இதையடுத்து அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், அங்கிருந்து அவரை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

 இதுகுறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe