கதவைத் திறந்து வைத்துத் தூங்கியபோது வீட்டில் புகுந்து கொள்ளை

published 1 year ago

கதவைத் திறந்து வைத்துத் தூங்கியபோது வீட்டில் புகுந்து கொள்ளை

கோவை: கோவையில் கதவைத் திறந்து வைத்து தூங்கியபோது வீட்டில் புகுந்து 3 ஜோடி வெள்ளி கொலுசுகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

 கோவை பிஎன் புதூர் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் மோகன்(73). சொந்த தொழில் செய்து வருகிறார். 

இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். பின்னர் நேற்று அதிகாலை எழுந்து கழிவறைக்குச் சென்று விட்டு கதவை பூட்டாமல் தூங்கினார். 

அப்போது நைசாக வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் பீரோவில் இருந்த 3 ஜோடி வெள்ளி கொழுசுகள், வெள்ளி செயின் மற்றும் ரூ. 2 ஆயிரம் பணத்தைத் திருடி சென்று விட்டார்.

 காலையில் எழுந்து பார்த்த போது வீட்டில் திருடு போயிருப்பதைக் கண்டு மோகன் அதிர்ச்சியடைந்தார். 

உடனே அவர் இது குறித்து சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

 புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளி கொழுசுகள், பணத்தைத் திருடி சென்ற மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe