கார், மொபட் மோதியது!..

published 1 year ago

கார், மொபட் மோதியது!..

கோவை: கார், மொபட் மோதியதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கோவை சொக்கம்புதூர் பழனியப்பா நகரைச் சேர்ந்தவர் கிருபாகரன் மகள் சுகவர்ஷா(25). 

இவர் நேற்று மொபட்டில் முத்தண்ணன்குளம் - சொக்கம்புதூர் ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்குத் தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. 

அந்த வழியாகச் சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். 

இந்த விபத்து தொடர்பாக கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe