தோலம்பாளையத்தில் 21ம் தேதி கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம்

published 1 year ago

தோலம்பாளையத்தில் 21ம் தேதி கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம்

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் தோலம்பாளையம் கிராமம், திப்பாதேவி கோவில் திருமண மண்டபத்தில் வரும் 21ம் தேதி காலை 11 மணியளவில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.

 இதனை அடுத்து வரும் 7ம் தேதி காலை 11 மணியளவில் அனைத்து துறை அலுவலர்கள் முன்னிலையில் கோவை வடக்கு வருவாய்க் கோட்டாட்சியர் தோலம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் மற்றும் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்திலும் பொதுமக்களிடம் முன் மனுக்களைப் பெற உள்ளார்.

 பொது மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி கோவை வடக்கு வருவாய்க் கோட்டாட்சியரிடம் கொடுக்கலாம்

. மனுக்களைச் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் விசாரணை செய்து 21ம் தேதி தோலம்பாளையம் கிராமம் திப்பாதேவி கோவில் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கிராந்தி குமார் பாடி வழங்க உள்ளார்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe