லாட்ஜில் வாலிபர் மர்மசாவு

published 1 year ago

லாட்ஜில் வாலிபர் மர்மசாவு

கோவை:

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஆதர்ஸ்(40). திருமணமாகாதவர். 

இவர் நேற்று முன்தினம் கோவை வந்தார். காந்திபுரம் 3வது வீதியில் உள்ள லாட்ஜில் அறை எடுத்துத் தங்கினார். ஆனால் நேற்று இரவு வரை அவர் அறையில் இருந்து வெளியே வரவில்லை. 

இதனால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள் அறைக் கதவைத் திறந்து பார்த்தனர். 

அப்போது அறைக்குள் ஆதர்ஸ் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இது குறித்து லாட்ஜ் நிர்வாகத்தினர் காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். 

அதன்பேரில், போலீசார் அங்குச் சென்று அவரின் உடலைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe