கோவையில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் 256 மீது வழக்கு..

published 1 year ago

கோவையில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர்  256 மீது வழக்கு..

கோவை: சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் துறையினர் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். 

அதன் அடிப்படையில் மலுமிச்சம்பட்டி- செட்டிபாளையம் ரோடு (மாரியம்மன் கோவில் அருகே)  கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு  உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான  மாரியம்மன் கோவில் அருகே சென்று சோதனை  மேற்கொண்டனர். 

அப்போது   கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுதிர் காந்த் ரைக்கா மகன் ஸ்ப்ளென்ட் ரோஷன் ரைக்கா(29) என்பவரைக்  கைது செய்து அவரிடமிருந்து 5 கிலோ   எடையுள்ள கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

மேலும் அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டத்தில் போதைப் பொருட்களின் விற்பனையைத் தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கையின் பேரில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 343 நபர்கள் மீது 256 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 511.411 கிலோ கிராம் எடையுள்ள  கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe