சீட்டு கம்பெனி நடத்தி மோசடி : பெண் கைது

published 1 year ago

சீட்டு கம்பெனி நடத்தி மோசடி : பெண் கைது

கோவை: கோவையில் சீட்டு கம்பெனி நடத்தி ரூ. 2 லட்சம் மோசடி செய்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

கோவை ரத்தினபுரி ஜீவானந்தம் ரோட்டை சேர்ந்தவர் சீமான் (48). கேட்டரிங் சர்வீஸ் செய்து வருகிறார்.

இவர் கடந்த 9-1-20ம் ஆண்டு முதல் 21-4-21 வரை கோவை காந்திபுரம் சித்தாபுதூரில் செயல்பட்டு வந்த தனவ்ருக்‌ஷம் என்ற சீட்டு கம்பெனியில் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை என ரூ.2 லட்சம் பணம் கட்டினார்.

ஆனால் சீட்டு முதிர்வு காலம் முடிவடைந்த பின்னரும் நிர்வாகத்தினர் பணம் தரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சீமான் சீட்டு கம்பெனி செயல்பட்டு வந்த அலுவலகத்துக்கு சென்று பார்த்த போது பூட்டப்பட்டிருந்தது.

சீட்டு கம்பெனி நடத்தி சீமானிடம் ரூ. 2 லட்சம் மோசடி செய்து விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த சீமான் இதுகுறித்து காட்டூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதை தொடர்ந்து சீட்டு கம்பெனி நடத்திய சிறுமுகை திருவள்ளுவர் நகரை சேர்ந்த சத்யபிரியா (31), என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக கிருஷ்ணசாமி, டேவிட் சுந்தராஜன் மற்றும் சலீம் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe