தொழிலாளியை தாக்கிய அண்ணன் மகன் கைது

published 1 year ago

தொழிலாளியை தாக்கிய அண்ணன் மகன் கைது

கோவை: கோவை பொன்னையா ராஜபுரம் பழனிச்சாமி காலனியை சேர்ந்தவர் சந்திரகுமார், 46. இவர் மாநகராட்சியில் தண்ணீர் திறந்து விடும் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். 

சந்திரகுமாரின் வீட்டின் அருகில் அவரது அண்ணன் மகன் விக்னேஷ், 23, என்பவர் வசித்து வருகிறார். எலக்ட்ரீசியனான இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. 

இதனால் விக்னேஷ் மது போதையில் அடிக்கடி சந்திரகுமாரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். 

நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் இருந்த விக்னேஷ் சந்திரகுமாரின் வீட்டிற்குள் புகுந்து தகாத வார்த்தைகள் திட்டி அவரை தாக்கினார்.

 காயமடைந்த சந்திரகுமார் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் விக்னேசை கைது செய்து, சிறையில் அடைத்தனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe