இரண்டு கார்களில் லேப்டாப், போன்கள் திருட்டு

published 1 year ago

இரண்டு கார்களில் லேப்டாப், போன்கள் திருட்டு

கோவை: கோவை காளப்பட்டி நேரு நகரை சேர்ந்தவர் சத்யராஜ், 38, தனியார் நிறுவன ஊழியர். 

இவர் நேற்று முன்தினம் மாலை அவிநாசி ரோட்டில் உள்ள லாட்ஜின் அருகே உள்ள காலி இடத்தில் காரை நிறுத்திவிட்டு சாப்பிடுவதற்காக சென்றார்.

 சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது காரின் கண்ணாடி உடைந்து இருந்தது. காருக்குள் பார்த்தபோது உள்ளே வைக்கப்பட்டிருந்த லேப்டாப் காணாமல் போயிருந்தது. 

சத்யராஜ் புகாரின் படி பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதேபோல வடவள்ளி கல்வீரம்பாளையத்தை சேர்ந்தவர் தீபன் சக்கரவர்த்தி, 29. 

இவர் கடந்த, 4ம் தேதி அவிநாசி ரோட்டில் பிருந்தாவன் ஆடிட்டோரியம் அருகே உள்ள கார் பார்க்கிங்கில் காரை நிறுத்தி சென்றார். திரும்பி வந்து பார்த்த போது காரின் கண்ணாடி உடைந்திருந்தது. 

காரின் உள்ளே வைக்கப்பட்டு இருந்த இரண்டு மொபைல் போன்கள் திருடு போயிருந்தது. தீபன் சக்கரவர்த்தி புகாரின் படி பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe