கோவையில் பைக் மீது கண்டெய்னர் லாரி மோதி பொறியியல் மாணவர் பரிதாப பலி

published 1 year ago

கோவையில் பைக் மீது கண்டெய்னர் லாரி மோதி பொறியியல் மாணவர் பரிதாப பலி

கோவை: கோவை வரதராஜபுரம் காமராஜர் ரோட்டை சேர்ந்தவர் பூபாலகிருஷ்ணன் மகன் தருணன்(21). கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஇ 4ம் ஆண்டு படித்து வந்தார். 

இவர் நேற்று முன்தினம் இரவு பைக்கில் எல்.அண்ட்.டி பைபாஸ் ரோடு ஜல்லிக்கட்டு மைதானம் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரி எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது. 

இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட தருணன் தலை, மார்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்தார்.

அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பாக கோவை மேற்கு போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சேலம் கிச்சிபாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் மாரியப்பன்(42) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe