கோவையில் தொழிலதிபரிடம் ரூ.14.50 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது

published 1 year ago

கோவையில் தொழிலதிபரிடம் ரூ.14.50 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது

கோவை: கோவையில் தொழிலதிபரிடம் ரூ.14.50 லட்சம் மோசடி செய்ததாக வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை ரத்தினபுரி ஜீவானந்தம் ரோட்டை சேர்ந்தவர் ராஜப்பன் (65), தொழிலதிபர். இவரது வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக ரஞ்சித்குமார் (29) என்பவர் வசித்து வருகிறார். 

இருவரும் நட்பாக பழகி வந்தனர். அப்போது ரஞ்சித்குமார் தான் சொந்தமாக தொழில் செய்ய விரும்புகிறேன்.

அதற்கு பணம் கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து ராஜப்பன் நம்பிக்கையின் பேரில், கடந்த ஆண்டு ரூ.5 லட்சத்தை கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட ரஞ்சித்குமார் டயர் விற்பனை செய்யும் தொழில் ஆரம்பித்தார். 

இதற்கிடையே ரஞ்சித்குமார் கேட்டதின் பேரில், மீண்டும் ராஜப்பன் ரூ.9.5 லட்சத்தை அவரிடம் கொடுத்ததாக தெரிகிறது.

இந்நிலையில், ராஜப்பன் தான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டார். அதற்கு ரஞ்சித்குமார், 2 வங்கி காசோலைகளை கொடுத்தார். அதனை ராஜப்பன் வங்கியில் செலுத்தியபோது, காசோலை பணம் இல்லாமல் திரும்பியது.

இதுகுறித்து ரஞ்சித்குமாரிடம் கேட்டபோது, அவர் பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

 இதுகுறித்து ராஜப்பன் காட்டூர் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், ரஞ்சித்குமார் சிலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து காட்டூர் போலீசார் ரஞ்சித்குமாரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe