காந்திபுரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பெண்ணிடம் செல்போன் பறிக்கமுய்ற்சி!..

published 1 year ago

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பெண்ணிடம் செல்போன் பறிக்கமுய்ற்சி!..

கோவை: கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் சுஜித்ரா(22). கோவையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

 இந்நிலையில், நேற்று சுஜித்ரா தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பஸ்சில் ஏறினார்.

அப்போது அவரது அருகில் நின்றிருந்த 2 வாலிபர்கள் திடீரென கூட்ட நெரிசலை பயன்படுத்தி சுஜித்ரா பேக்கில் வைத்திருந்த செல்போனை திருடி தப்பி செல்ல முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சுஜித்ரா சத்தம்போட்டார்.

அக்கம்பக்கத்தினர் 2 பேரில் ஒரு வாலிபரை பிடித்து காட்டூர் போலீசில் ஒப்படைத்தனர். மற்றொருவர் தப்பி ஓடி விட்டார். 

விசாரணையில், செல்போன் பறித்தது ஊட்டியை சேர்ந்த ரித்திக்(22) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். தப்பி ஓடிய சஞ்சய் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதேபோல், திருநெல்வேலி மாவட்டம் சங்கர் நகரை சேர்ந்தவர் சயத் முஸ்தபா(20). கல்லூரி மாணவர். மேலும் இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக உள்ளார். நேற்று சயத் முஸ்தபா கோவையில் நடைபற்ற திமுக கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

பின்னர் ஊருக்கு செல்வதற்காக இரவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் சயத் முஸ்தபாவின் செல்போனை பறித்து தப்ப முயன்றார். 

அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை பிடித்து காட்டூர் போலீசில் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீசார் செல்போன் பறித்த மத்தியபிரதேசத்தை சேர்ந்த லோகேந்திர சிங்(21) என்பவரை கைது செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe